மொபைல் கேமராவில் பதிவான தற்கொலை காட்சி

by Staff / 11-01-2024 11:55:40am
மொபைல் கேமராவில் பதிவான தற்கொலை காட்சி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கலை மற்றும் கைவினைக் கல்லூரி மாணவி ஒருவர், அங்குள்ள திலக் விடுதியில் உள்ள தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது செல்போன் கேமராவில் தற்கொலை செய்துகொண்ட காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதன்கிழமை மாலை மின்விசிறியில் மாணவி தூக்குப்போட்டுக் கொண்டது அவரது செல்போன் கேமராவில் பதிவானது. இந்த மாணவிக்கும், வாரணாசியில் வசிக்கும் ஒருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையே இந்த தற்கொலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மாணவியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via