ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது” – முதலமைச்சர் அறிவிப்பு!

by Editor / 14-01-2024 10:39:32pm
ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது” – முதலமைச்சர் அறிவிப்பு!

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். வங்கி ஊழியரான இவர், கொடிக்குளம் அரசுப் பள்ளி விரிவாக்கத்துக்காக தனக்குச் சொந்தமான ரூ.4.50 கோடி மதிப்பிலான 1.50 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இதுகுறித்து அறிந்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், பூரணம் அம்மாளை கடந்த ஜன. 11-ம் தேதி நேரில் சந்தித்து பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியும் பூரணம் அம்மாளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

 

Tags : ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது” – முதலமைச்சர் அறிவிப்பு!

Share via