‘இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு ரூ.1.2 கோடி அபராதம்
கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில், விமான ஓடுபாதையில் பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ (பிசிஏஎஸ்) தீவிரமாக ஆய்வு செய்துள்ளது. இதற்கு காரணமான உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவுக்கு ரூ.1.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி விமான ஓடுபாதையில் அமர்ந்து உணவு வழங்கியதே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
Tags :