மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - நிர்மலா சீதாராமன்

by Staff / 01-02-2024 11:50:45am
மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - நிர்மலா சீதாராமன்

அனைத்து துறைகளையும் மேம்படுத்தும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் பேசுகையில், “பத்து ஆண்டுகளில் மோடி கொண்டு வந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. நிதி அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊழலைக் குறைத்து, வெளிப்படையான நிர்வாகத்தை அதிகரித்துள்ளோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மீண்டும் ஆட்சிக்கு வருவோம். தன்னம்பிக்கை இந்தியாவில் அனைவரும் பங்குதாரர்கள். கொரோனா நெருக்கடியை சமாளித்துவிட்டோம். தொழில் துறை ஊக்குவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம்,'' என்றார்.

 

Tags :

Share via