நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆஜராக அவகாசம்: என்ஐஏ உத்தரவாதம்

by Staff / 03-02-2024 01:51:56pm
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆஜராக அவகாசம்: என்ஐஏ உத்தரவாதம்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிக்கு பிறப்பித்த சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பிப். 5-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகஅவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரு பொறியியல் பட்டதாரிகள் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்திருந்தது. சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது.

 

Tags :

Share via