திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை நிறைவு

by Staff / 04-02-2024 12:20:18pm
திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இன்று திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த முறை கோவை, மதுரை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். திமுக-மார்க்சிஸ்ட் இடையேயான பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பி.சம்பத் தெரிவித்துள்ளார். சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் சம்பத், சண்முகம், கனகராஜ் உள்ளிட்டோர் திமுக குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மதுரை, கோவை, நாகப்பட்டினம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 5 விருப்ப தொகுதிகளின் பட்டியலை சிபிஎம் கட்சி வழங்கியுள்ளது.

 

Tags :

Share via