பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது வதந்தி - காவல்துறை

by Staff / 08-02-2024 05:16:54pm
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது வதந்தி - காவல்துறை

சென்னையில் 17 பள்ளிகளுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளில் குவிந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் ஆணையர் , சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் வதந்தி. பொதுமக்கள் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டாம். 17 புலிகளுக்கும் ஒரே மெயில் ஐடியில் இருந்துதான் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via