ராஜபாளையத்தில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 15-02-2024 01:08:05pm
ராஜபாளையத்தில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையம் அருகே லட்சுமியா புரத்தை சேர்ந்தவர் போத்திராஜ். இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஸ்ரீலயம் தனியார் பள்ளியில் 10 வகுப்பு ஆங்கில வழியில் படித்து வந்தார். பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய அவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பள்ளியில் இருந்து மாணவர் மாலை நேர சிறப்பு வகுப்புக்கு வரவில்லை என தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை போத்திராஜ் மகன் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் பின்னால் பயன்பாடு இல்லாத அறையில் விளக்கு எரிந்ததை கண்டு சந்தேகம் கொண்ட தந்தை அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவர் உத்திரத்தில் உள்ள கட்டையில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடன் பயலும் மாணவர்களிடம் விசாரித்த போது, படிப்பில் மந்தமாக இருந்த மாணவரை தனியார்பள்ளி ஆசிரியர் மாரிச்சாமி என்பவர் சக மாணவர்கள் முன்னிலையில் அடித்து திட்டி அசிங்கப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via