பாஜக நிர்வாகி படுகொலை: எல்.முருகன் இரங்கல்

by Staff / 15-02-2024 02:46:48pm
பாஜக நிர்வாகி படுகொலை: எல்.முருகன் இரங்கல்

மதுரை மாவட்ட ஓபிசி அணியைச் சேர்ந்த சக்திவேல், நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த சமயத்தில், அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் எக்ஸில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சமூகநீதி மற்றும் அரசாங்க நிர்வாகம் என்று அனைத்து வகையிலும் திறனற்ற ஆட்சி நடத்தி வரும் இந்த போலி திராவிட மாடல் ஆட்சிக்கு, விரைவில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via