விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு

by Staff / 21-02-2024 03:33:01pm
விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு

டெல்லி எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், விவசாயிகள் சங்கங்கள் மீண்டும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக விவசாயிகள் வாகனங்கள் மூலம் டெல்லி எல்லையை அடைந்து தடுப்புகளை தகர்க்க முயன்றபோது, ​​விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் விவசாயிகள் பலர் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via