பொள்ளாச்சி பாலியல் வழக்கு - கைதானவர்கள் ஆஜர்

by Staff / 23-02-2024 01:35:52pm
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - கைதானவர்கள் ஆஜர்

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 9 பேரும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் சிபிசிஐடி சேகரித்த கூடுதல் ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பிறகு, 2 ஆண்டுகளாக காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடந்து வந்தது. விரைவில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via