பாலாற்றின் குறுக்கே அணை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர்

by Staff / 27-02-2024 05:28:35pm
பாலாற்றின் குறுக்கே அணை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர்


பாலாற்றின் குறுக்கே அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தமிழக அரசு விடாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், புதிய அணை கட்ட ஆந்திர அரசு நிதி ஒதுக்கியது தவறான முடிவு. ஏற்கெனவே உள்ள அணை ஒப்பந்தப்படி புதிய அணை கட்டக் கூடாது. இதுதொடர்பாக பலமுறை உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. ஆந்திராவின் முடிவு நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாக உள்ளது. பாலாற்றில் நிச்சயம் அணை கட்டப்படாது என்றார்.

 

Tags :

Share via