தண்டவாளத்தில் நடந்து வந்த பெண்ணை நூலிழையில் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

by Editor / 10-09-2022 10:52:59am
தண்டவாளத்தில் நடந்து வந்த பெண்ணை நூலிழையில் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் ரயில் நிலையத்தில் ரயில் வேகமாக வந்து கொண்டிருப்பதை கவனிக்காமல், தண்டவாளத்தில் ஒரு பெண் நடந்து வந்துள்ளார். திடீரென மிக அருகில் ரயில் வருவதை கண்டு பயந்து, பிளாட்பார்மில் ஏற முடியாமல் அந்த பெண் பயத்தில் தவித்த போது, வேகமாக ஓடி வந்து ரயில்வே போலீஸார் ஒருவர் அவருக்கு கைது கொடுத்து தூக்கி காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த ரயில்வே காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via