விநாயகர் சிலைகளை கரைக்க சென்று 7 பேர் பலி

by Editor / 10-09-2022 10:41:35am
விநாயகர் சிலைகளை கரைக்க சென்று 7 பேர் பலி

அரியானாவில் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சோனிபட் நகரில் மீமர்பூர் காட் பகுதியில் தனது மகன் மற்றும் மருமகனுடன் விநாயகர் சிலையை கரைக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மகேந்திரகார் நகரில் ஜகதோலி கிராமம் அருகே கனீனா-ரேவரி சாலையில் அமைந்த கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 9 பேர் நீரோட்டத்தின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் நேற்றிரவு மீட்கப்பட்டனர். எனினும், 4 பேர் உயிரிழந்து விட்டனர். இதனால், அரியானாவில் மொத்த உயிரிழப்பு 7 ஆக உள்ளது. இந்த சம்பவங்களுக்கு முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்தார்.

 

Tags :

Share via