நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் - முதல்வர் திறந்து வைப்பு

by Staff / 28-02-2024 03:30:30pm
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் - முதல்வர் திறந்து வைப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.9.17 கோடி செலவில் 2 வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் 4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக, ரூ.122.50 கோடி மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 40 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் மற்றும் 6 வட்ட செயல் முறை கிடங்குகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில், அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால், நுகர் பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via