கங்கை ஆற்றில் நீராட வேண்டாம் - எச்சரிக்கை

by Staff / 29-02-2024 12:03:49pm
கங்கை ஆற்றில் நீராட வேண்டாம் - எச்சரிக்கை

கங்கையில் நீராட வேண்டாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை ஆற்றை, பொதுமக்கள் குளிக்க தகுதி இல்லாத இடமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 258.67 மில்லியன் லிட்டர் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via