பள்ளிகள் மீது தாக்குதல் - 280 குழந்தைகள் கடத்தல்!

by Staff / 08-03-2024 05:07:37pm
பள்ளிகள் மீது தாக்குதல் - 280 குழந்தைகள் கடத்தல்!

நைஜீரியாவில் உள்ள பள்ளிகளுக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆசிரியர் உட்பட 187 பேரைக் கடத்திச் சென்றது. மற்றொரு ஆரம்பப் பள்ளியில் இருந்து 125 பேர் கடத்தப்பட்டனர். அவர்களில் 25 பேர் தப்பி ஓடிவிட்டனர். கடுனா மாநிலம் சிக்குன் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. மாணவிகள் கடத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை காப்பாற்ற ஆயுதப்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via