தேர்தல் பத்திர ஊழல் - லாட்டரி அதிபர் மார்ட்டின் யார்

by Staff / 15-03-2024 02:30:15pm
தேர்தல் பத்திர ஊழல் - லாட்டரி அதிபர் மார்ட்டின் யார்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு பணம் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல், முத்தூட் பைனான்ஸ், பஜாஜ், வேதாந்தா, நவயுகா, ஐடிசி, பிவிஆர் சினிமாஸ், நாட்கோ பார்மா, சன் பார்மா ஆகிய பல நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மாராட்டினுக்குச் சொந்தமான future gaming and hotel services private limited நிறுவனம்தான் முதலிடம் பிடித்துள்ளது. அவர் கிட்டத்தட்ட ரூ,1,368 கோடி கொட்டிக் கொடுத்துள்ளார். மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via