நிர்வாகி மீது தாக்குதல்-ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குரத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி 2021ஆம் ஆண்டு செப்.24-ல் வந்தபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்தவழக்கில் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Tags : Attack on Administrator-Registered case against Rajendra Balaji