சென்னையில் இடி மின்னலுடன் கனமழை
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23-ஆம் தேதி வரை கனமழை மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழையும் பெருவாரியான பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் சடசடவென மழை பெய்ய தொடங்கியது. சென்னை, சைதாப்பேட்டை, கிண்டி, நூங்கம்பாக்கம், வடபழனி, ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் ஓரங்களில் தஞ்சம் அடைந்தனர். சிலர் வாகனங்களில் முகப்பு விளக்கு ஒளிர சாலையில் பயணித்து வருகின்றனர்..
தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய இயல்பான மழை என்ற போதிலும் சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த மலையானது தொடர்ந்து பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags :