கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா விஜயகாந்த்

by Staff / 01-04-2024 11:37:01am
கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா விஜயகாந்த்

கள்ளக்குறிச்சி வாணாபுரம் கூட்ரோடு பகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வருகை தந்தார். அப்போது வேட்பாளர் குமரகுரு பேசும் பொழுது கேப்டன் வாழ்ந்த இடம் என பேசிய பொழுது மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார். முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்திற்கு, வேட்பாளர் உள்பட இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via