அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை

by Staff / 01-04-2024 11:54:04am
அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத்தடை விதித்து ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தனுஷ்கோடியில் வரலாறு காணாத கடல் சீற்றம் காரணமாக 20 அடிக்கு மேல் அலைகள் எழுகின்றன. இதனால் தடுப்புகளைத் தாண்டி கடல் நீர் நெடுஞ்சாலைக்கு வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை யாரும் அப்பகுதிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

 

Tags :

Share via