சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 02-04-2024 11:13:58am
சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) சிறப்பு எஸ்எஸ்ஐ ஆன இவர் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்‌. கடந்த ஐந்து நாட்களாக பணிக்கு செல்லாத சரவணன் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டு பின்புறம் இருக்கும் தோட்டப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via