மேற்கு வங்கத்தில் என்ஐஏ குழு மீது தாக்குதல்

by Staff / 06-04-2024 12:15:58pm
மேற்கு வங்கத்தில் என்ஐஏ குழு மீது தாக்குதல்

மேற்குவங்க மாநிலம், கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பூபதிநகர் பகுதியில் சனிக்கிழமை காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குழு மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் என்ஐஏ அதிகாரி ஒருவர் காயமடைந்தார். பூபதிநகரில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் 2022ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.

 

Tags :

Share via