நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம்

by Editor / 16-04-2024 08:53:50am
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம்

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 15, 2019 அன்று டெல்லி மற்றும் வாரணாசி இடையே முதல் சேவை தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 31 வரை, இந்த அரை அதிவேக ரயில்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில்கள் பயணிகள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

Tags : நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்

Share via