8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Editor / 16-04-2024 08:50:43am
 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், பல இடங்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Share via