பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு ரூ.3 லட்சம் நிவாரணம்.

by Editor / 16-04-2024 08:46:15am
பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு ரூ.3 லட்சம் நிவாரணம்.

ஒடிசாவில் மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை 16ல் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்து பாலத்தில் இருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பேருந்து அப்பளமாக நொறுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வருத்தம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு ரூ.3 லட்சம் நிவாரணம்.

Share via