காரில் கடத்திச் செல்லப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலையை பறிமுதல் செய்த காவல்துறையினர்
கோவை அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மாவட்டத்தில் நடராஜர் சிலை சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இருகூர் பகுதியில் போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது கார் ஒன்றில் கடத்திவரப்பட்ட மூன்று அடி உயர திருவாசியுடன் கூடிய நடராஜர் உலக சிலையினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நபர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
Tags :