வீட்டில் தனியாக இருந்த முதியவர் கழுத்து அறுத்து கொலை

by Editor / 07-07-2022 10:22:20am
 வீட்டில் தனியாக இருந்த முதியவர் கழுத்து அறுத்து கொலை

 தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவல் பச்சேரி கிராமம் கீழ மடத்துத் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கருப்பையா வயது 62. வீட்டுக்குள் படுத்து இருந்தவரை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.  இவரது மனைவி  இவர்களது மகனான முத்துக்குமாருடன் இருந்து வருகிறார். இவர் தனியாக இந்த வீட்டில் இருக்கிறார் இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகளும் உள்ளனர் மூவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள் இவர்  வட்டிக்கு  கொடுப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்து புளியங்குடி டிஎஸ்பி கணேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags : An old man who was alone at home was killed by slitting his throat

Share via