ஹேமந்த் சோரனுக்கு அதிர்ச்சி.. மேலும் 4 பேர் கைது

by Staff / 17-04-2024 12:54:01pm
ஹேமந்த் சோரனுக்கு அதிர்ச்சி.. மேலும் 4 பேர் கைது

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளார். சோரன் மற்றும் பிறருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட நில அபகரிப்பு மற்றும் பணமோசடி வழக்கில் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பிரியா ரஞ்சன் சஹாய், பிபின் சிங் மற்றும் இர்ஷாத் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via