செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Staff / 04-04-2024 04:28:05pm
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 31வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via