சபரிமலை பக்தர்கள் சமையல் செய்ய தடை
பம்பை முதல் சன்னிதானம் வரையிலும் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்ப்படும் எனவும், சன்னிதானத்திற்கு சரக்கு ஏற்றி வரும் டிராக்டர்கள் கண்காணிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தினபோது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும், தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
Tags :