சென்னையில் மழை பாதிப்பு நேரில் ஆய்வு செய்த முதல்வர்.மு.க.ஸ்டாலின்

by Editor / 07-11-2021 02:45:30pm
சென்னையில் மழை பாதிப்பு  நேரில் ஆய்வு செய்த முதல்வர்.மு.க.ஸ்டாலின்

 

வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களோடு நேரில் ஆய்வு செய்தார்.


சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிபோயுள்ளது. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காட்டுத் தாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் நீர் 


 குளம் போல தேங்கியிருக்கிறது. இதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் பெரும்  சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்துவருகிறது.

தொடர்ந்து பெய்துவரும்  மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் அந்தப்பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தலைமைசெயலாளர் இறையன்பு,மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களும் அவருடன் ஆய்வு பணிகளில்கலந்துகொண்டனர்.மேலும் முதல்வர்  தனது காரில் செல்லாமல்  ஜீப்பில் எழும்பூர் மற்றும் பெரம்பூர் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார்.


மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என திமுகவினருக்கு அவர்  வேண்டுகோள்விடுத்துள்ளார்.அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via