மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவரும் கழுத்தறுத்து தற்கொலை

by Editor / 31-10-2022 08:33:04am
 மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவரும் கழுத்தறுத்து  தற்கொலை

கோவில்பட்டி கடலையூர் சாலை, பெருமாள் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜபாண்டி(45), பரணிசெல்வி(40) தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் பெருமாள் நகரில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். இதற்காக வாங்கிய கடன் தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் கதவு வெகுநேரமாக உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பரணி செல்வி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ராஜபாண்டியும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சடலமாக கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் தம்பதியருக்குள் நடந்த சண்டையில் மனைவி பரணி செல்வியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, தானும் கழுத்தை அறுத்து ராஜபாண்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via