விமானத்தில் பயணம் செய்த பயணியின் செல்போன் தீப்பிடித்தது.
அசாம் மாநிலம் திப்ருகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ, விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் செல்போனில் தீப்பொறி வெளியேறியது.
மற்ற இடங்களுக்கு தீ பரவுவதற்குள் துரிதமாக செயல்பட்ட விமான ஊழியர்கள் தீ அணைப்பாணை கொண்டு தீயை அணைத்தனர்.
பின் விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. செல்போன் தீப்பற்றிய காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Tags :