தமிழகத்தில் ஒரேநாளில்  298 பேர் உயிரிழப்பு 

by Editor / 11-05-2021 08:27:59pm
தமிழகத்தில் ஒரேநாளில்  298 பேர் உயிரிழப்பு 


தமிழக சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 29,272பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14லட்சத்து 38ஆயிரத்து 509ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,62,181ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 16,983பேர் ஆண்கள், 12,289பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 7,466பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
நேற்று மட்டும்  298 பேர் உயிரிழந்துள்ளார். 106பேர் தனியார் மருத்துவமனையிலும், 192 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,178ஆக அதிகரித்துள்ளது.  19,182பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,60,150ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via