ஈரோடு எம்.பி. தற்கொலை முயற்சி

by Staff / 24-03-2024 02:53:09pm
ஈரோடு எம்.பி. தற்கொலை முயற்சி

ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மதிமுகவை சேர்ந்த அவர் காலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் ஒருவாரமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via