சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மை.. முதல்வர் ட்வீட்

by Staff / 20-05-2023 12:23:32pm
சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மை.. முதல்வர் ட்வீட்

திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசரின் புகழ் ஓங்கட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளை முன்னிட்டு ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், 'அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணிப் பார்க்கத்தக்கது. பண்டிதரின் கருத்துகளை ஊன்றிப் படிப்போம். நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்' என கூறியுள்ளார்.

 

Tags :

Share via