தலைமைத்தேர்தல் அதிகாரி மனைவியோடு வந்து வாக்களித்தார்.

by Editor / 19-04-2024 09:34:58am
தலைமைத்தேர்தல் அதிகாரி மனைவியோடு வந்து வாக்களித்தார்.

சென்னை நெற்குன்றத்தில் வாக்களிக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது மனைவியுடன் வருகை தந்தார். வாக்களித்தப் பின்னர் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன. மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர்" என்றார்.

 

Tags : தலைமைத்தேர்தல் அதிகாரி மனைவியோடு வந்து வாக்களித்தார்.

Share via