கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரண்:

by Editor / 15-02-2023 08:17:37pm
 கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரண்:


கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த  சக்தி என்கிற சத்தியா பாண்டியனை கடந்த 12 ம்  ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது.இதில் சத்திய பாண்டியன்  சம்பவயிடத்தில் பலியானதாகவும், கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று 15 ம் தேதி  மதியம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சஞ்சய்குமார்(23), காஜா உசேன்(23), ஆல்வின்(34) மற்றும் சல்பல்கான் உபயத்துல்லா(23) உட்பட நான்கு அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஷகீரா பானு முன்னிலையில்  சரணடைந்தனர். இவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஷீகீரா பானு உத்தரவிட்டார். இதனையடுத்து நால்வரையும் அரக்கோணம் நகர காவல்துறையினர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்க பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

 

Tags :

Share via