பைக் விபத்து - தீயில் கருகி ஒருவர் பலி

by Staff / 23-04-2024 03:38:11pm
பைக் விபத்து - தீயில் கருகி ஒருவர் பலி

ஆந்திர மாநிலத்தில் பைக் வெடித்த விபத்தில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். பெனுகஞ்சிப்ரோலு அருகே உள்ள நவாபுபேட்டா குறுக்கு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த சிந்தா வெங்கையா என்பவர் வணிக நோக்கத்திற்காக பெட்ரோல் வாங்கிவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதில், பைக்குடன் வெங்கையாவும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Tags :

Share via