சென்னையில் ரூ.11 கோடி போதைப் பொருள் பறிமுதல்

by Staff / 24-04-2024 12:20:50pm
சென்னையில் ரூ.11 கோடி போதைப் பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோகாவில் இருந்து வந்த இளைஞர் கடத்தி வந்த 11 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories