பாஜக அமைச்சருக்கு கொலை மிரட்டல் - போலீஸ் வழக்குப்பதிவு
ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் கரடிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றியதற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் கூறினார். இது குறித்து போலீசில் புகார் செய்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனக்கு இந்த மிரட்டல்கள் வந்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதய்பூர் கோடா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :