பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்.. 7 தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடாரில் வியாழக்கிழமை(மே 9) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் முடிதிருத்தும் கடையில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் வசித்து வந்த கட்டிடத்தின் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.
Tags :