கேரளாவுக்கு தரமற்ற இறைச்சி: தடுக்க நடவடிக்கை
அண்டை மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு 'சுனாமி' (தரமற்ற) இறைச்சி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதை தடுக்க, அவ்வப்போது ஆய்வுகள் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயர் நீதிமன்றம், அம்மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் அறிவியல் பூர்வமான இறைச்சிக் கூடங்கள் இல்லாத பிரச்னைக்கும் சிறப்பு கவனம் தேவை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் அறிவியல் பூர்வமான இறைச்சிக் கூடங்களின் தேவைகள் குறித்து ஆராயுமாறு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Tags :