உடலுறவு கொள்ள மறுத்த மனைவி கொலை

by Staff / 19-04-2023 12:10:45pm
உடலுறவு கொள்ள மறுத்த மனைவி கொலை

உடலுறவுக்கு மறுத்து கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றிய பின்னர், கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரைச் சேர்ந்த சங்கரும், மனைவி அஷாபாயும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து, உடலுறவுக்கு அழைத்த நிலையில் மனைவி மறுத்துள்ளார். தகராறு ஏற்பட்டதால், மனைவி கிணற்றில் குதித்துள்ளார். உடனே கிணற்றில் குதித்த சங்கர் மனைவியை காப்பாற்றியுள்ளார். மீண்டும் உடலுறவுக்கு அழைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்தி கொன்றுள்ளார். காலையில் தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சங்கரை கைது செய்தனர்.

 

Tags :

Share via