சிறுமியை கடத்தி திருமணம் செய்த பஸ் கண்டக்டர் கைது

by Admin / 10-08-2021 03:53:43pm
சிறுமியை கடத்தி திருமணம் செய்த பஸ் கண்டக்டர் கைது

 

சண்முகம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி சடையம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 38). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வெள்ளகோவில் கள்ளம்புதூரை சேர்ந்த 17 வயதான சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வெள்ளகோவில் அருகே உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் சண்முகம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி பெரியம்மா வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார். அப்போதுதான் அவரை  சண்முகம் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன் தாராபுரம் போலீசில் புகார் செய்தனர். டி.எஸ்.பி., தனராசு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம், சண்முகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தார்சண்முகத்திற்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via