டாஸ்மாக் கடையை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

by Editor / 17-08-2022 10:20:41pm
டாஸ்மாக் கடையை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மங்கைமடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில்  விற்பனையாளர் பூபதி கடந்த 3. 7. 2018 அன்று பணியில் இருந்தபோது நாங்கூர் மேல தெருவை சேர்ந்த இலக்கியராஜ் என்பவர் கடனுக்கு மது பாட்டில் கேட்டுள்ளார், பூபதி கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த இலக்கியராஜ் கடையில் இருந்த மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதோடு அதைத்தடுத்த விற்பனையாளர் பூபதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து இலக்கியராஜ் கைது செய்தனர். இந்த வழக்கு  மயிலாடுதுறை  கூடுதல்  மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் டாஸ்மாக் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த இலக்கியராஜிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 7 ஆயிரம்  அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். அரசு சார்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.

 

Tags :

Share via