புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு

by Admin / 12-08-2021 01:36:39pm
புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு

 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி மேல ரத வீதியை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 45).
 
இவர் நேற்று தனது குடும்ப செலவிற்காக வங்கிக்கு சென்று ரூ.2½ லட்சம் எடுத்தார். அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் பத்திரமாக வைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்.

வரும் வழியில் அந்த பகுதியில் உள்ள மில்லில் இலவசமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இதையறிந்த சித்தராஜ் மோட்டார் சைக்கிளை மில் வாசலில் நிறுத்திவிட்டு சுமார் 500 மீட்டர் தூரம் உள்ளே நடந்து சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் பெட்டி திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே பார்க்கும் போது அதில் இருந்த ரூ.2½ லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போயிருந்தது.

இது குறித்து அவர் சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2½ லட்சத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via