சாலை விபத்தில்  சிஆர்பிஎஃப் காவலர் பலி.

by Editor / 21-08-2021 05:25:15pm
 சாலை விபத்தில்  சிஆர்பிஎஃப் காவலர் பலி.


 

 தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர் பலியானார்.
வாசுதேவநல்லூர் தர்மர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் முருகேசன் வயது 49. இவர் டெல்லியில் சிஆர்பிஎஃப் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில்  முருகேசன் இலஞ்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வாசுதேவநல்லூர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். புளியங்குடி அடுத்துள்ள சிந்தாமணி அருகே வந்து கொண்டிருந்தபோது சிவகிரியில் இருந்து புளியங்குடியில் நோக்கி வந்து கொண்டிருந்த வெங்கடேஷ் என்பவர் காரில் முருகேசன் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகேசன் இறந்து விட்டதாக கூறினார்கள்.

 

Tags :

Share via